Tuesday, May 21, 2024
Home » 8 ½ கி. கி. தங்கத்தை சூட்சுமமாக கடத்திய இருவர் கைது

8 ½ கி. கி. தங்கத்தை சூட்சுமமாக கடத்திய இருவர் கைது

by Kalky Jeganathan
July 13, 2023 9:20 am 0 comment

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக எடுத்துச் செல்ல முற்பட்ட 8 கிலோ 450 கிராம் தங்கத்துடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று (12) காலை இடம்பெற்றுள்ளது.

கற்பிட்டி வன்னிமுந்தலம் களப்பு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைளினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கற்பிட்டி கடற்பகுதியை நோக்கி சந்தேகத்திற்கிடமான வகையில் டிங்கி படகு ஒன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்து சோதனையிட்டனர்.

இதன்போது டிங்கி படகில் சூட்சுமமாக மறைத்து சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு பொதிகளில் பொதி செய்யப்பட்ட தங்கம் கடற்படையினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT