இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன் பிடித்துக்கொண்டிருந்த 15 இந்திய மீனவர்களை, கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களுடன் இரண்டு ஆழ்கடல் மீன் பிடிப்படகுகளும் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
யாழ். நெடுந்தீவிற்கு அருகாமையில் கடற் பரப்பில் வைத்து இவர்களைக் கைது செய்ததாக தெரிவித்துள்ள கடற்படையினர், அவர்களை மேலதிக விசாரணைக்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இவ்வருடத்தின் நேற்று வரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்துள்ள 74 இந்திய மீனவர்களை, கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து 12 மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற் படையினர் தெரிவிக்கின்றனர்.
(யாழ்.விசேட நிருபர்)