Sunday, May 19, 2024
Home » தற்போது நிலவும் கடும் மழை, காற்று நிலை இன்று முதல் சிறிது குறைவடையும்

தற்போது நிலவும் கடும் மழை, காற்று நிலை இன்று முதல் சிறிது குறைவடையும்

- நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

by Rizwan Segu Mohideen
July 6, 2023 9:20 am 0 comment

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் கடும் மழை மற்றும் காற்றின் நிலைமையில் இன்று (06) முதல் சிறிதளவு குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேற்கு மாகாணம் மற்றும் மாத்தளை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் .

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT