பத்துக் கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதிகொண்ட ஜெல் வடிவத்திலான தங்கத்தை தமது உடலின் இரகசியப் பகுதிகளில் மறைத்துவைத்து கடத்திவந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
24 வயதான மேற்படி பெண், கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வையற்ற கடையொன்றின் அலங்கார பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் பணிபுரிபவரென்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஜெல் வடிவிலான தங்கத்தை நான்கு பக்கற்றுகளாக பொதி செய்து தமது உடலின் இரகசிய பகுதிகளில் மறைத்துவைத்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டுசெல்வதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே அவர் மேற்படி அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஐந்து கிலோவுக்கும் அதிகமான எடைகொண்ட தங்கத்தை நான்கு பார்சல்களாக அவர் தமது உடலில் மறைத்துவைத்து கொண்டுவந்துள்ளதுடன் நேற்றுக்காலை 8.45 மணியளவில் அவர் விமான நிலையத்திலிருந்து வெளியேற முனைந்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் விமான நிலையத்திலுள்ள பாதுகாப்பு கமரா தொகுதியில் கண்காணிக்கப்பட்டதன் பின்னரே அவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யுவதியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள தங்கத்தையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரிடம் ஒப்புடைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்