Saturday, May 11, 2024
Home » சீன மக்களால் உலர், உணவு பொதிகள் வழங்கி வைப்பு

சீன மக்களால் உலர், உணவு பொதிகள் வழங்கி வைப்பு

by Prashahini
November 6, 2023 9:27 am 0 comment

பௌத்த விகாரைகள் மற்றும் சீனாவின் பௌத்த மக்களால் இலங்கையில் உள்ள ஏழை மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கும் திட்டத்தின் கீழ் நேற்று (05) கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான சீனத் தூதுவர் நேற்று பிற்பகல் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்களில் வாழும் வறுமை கோட்டின் கீழ் உள்ள தெரிவு செய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைக்கும் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இவ் 500 பொதிகளில் கரைச்சி பிரதேச செயலகத்துக்கு 200 பொதிகளும், ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தலா 100 பொதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத்தூதுவர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்

கிளிநொச்சி குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT