கல்முனை கல்வி வலய கோட்டங்களுக்கான நடப்பாண்டின் தமிழ்மொழித் தினப் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை(25) ஆரம்பமாகவுள்ளன. கல்முனை வலயத்திலுள்ள கல்முனை, கல்முனை தமிழ், சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் ஆகிய ஐந்து கோட்டங்களுக்குமான எழுத்தாக்கப் போட்டிகளுடன் பாவோதல் மற்றும் பேச்சு போட்டிகளும் இம்முறை ஒரே தினத்தில் இடம்பெறவுள்ளன.
கல்முனை கோட்டத்திற்கான போட்டிகள் மஃமூத் மகளிர் தேசிய பாடசாலையிலும், கல்முனை தமிழ் கோட்டத்திற்கான போட்டிகள் பற்றிமா தேசிய பாடசாலையிலும், சாய்ந்தமருது கோட்டத்திற்கான போட்டிகள் அல்-ஜலால் மகாவித்தியாலயத்திலும், காரைதீவு கோட்டப் போட்டிகள் ஆர்.கே.எம்.பெண்கள் பாடசாலையிலும், நிந்தவூர் கோட்டத்திற்கான போட்டிகள் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலைகளிலும் நடைபெறவுள்ளன.
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி, கல்முனை் உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயம், காரைதீவு சண்முகா மகாவித்தியாலயம், நிந்தவூர் மதீனா மகாவித்தியாலயம் ஆகியவற்றில் தமிழ்மொழித் தினத்தின் திறந்த போட்டிகளுக்கான கோட்ட மட்டங்கள் 28 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.எம். –ஜெஸ்மி…
(பெரியநீலாவணை தினகரன் நிருபர்)