324
அரசு வழங்கிய இலக்கில் 98 வீதம் பூர்த்தி
2023 இல் இதுவரை இலங்கை கலால் திணைக்களம் 177 பில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுள்ளதாகவும் இந்த வருடம் அரசாங்கம் வழங்கிய இலக்கில் 98 வீதத்தை பெற முடிந்ததாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க நேற்று (29) தெரிவித்தார்.
இந்த வருமானத்தைப் பெறுவதற்கு கலால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகவும், அதற்காக அவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
2024 இல் பல்வேறு இலக்குகள் மூலம் அதிக வருமானம் ஈட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.