134
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நாளை (29) மாலை 5.30 மணிக்கு இலக்கியக்களம் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதன்போது, கொழும்புத் தமிழ்ச் சங்க பேரவை உறுப்பினர் வசந்தி தயாபரன் தலைமையில் இசைக்கச்சேரி நடைபெறவுள்ளதுடன், இசை முதுகலைமாணி சந்திரிகா ரவிகுமார் இசை அளிக்கையை நிகழ்த்தவுள்ளார்.
குயிலுவக் கலைஞர்களாக வயலின் கலைஞர் முதுகலைமாணி சுவர்ணாங்கி சுகர்தன், மிருதங்க கலைஞர் வை.வேணிலான் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.