இவ்வருடத்திற்காக ஊழியர்களுக்கு வழங்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்காதிருப்பதற்கு மின்சார சபை தீர்மானித்துள்ளது. இதுதொடர்பான பணிப்புரைகளை எரிசக்தி மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். அத்துடன் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 25% சம்பள அதிகரிப்பையும் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு அமைச்சர் வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாக அந்த சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மின்சார சபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் சம்பந்தமாக தகவல்கள் மற்றும் அதிகாரிகள் வாடகைக்குப் பெற்றுள்ள வாகனங்கள், அதற்கு வழங்கும் வாடகைப் பணம் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்றும் மின்சார சபை தலைவரிடம் அமைச்சர் கேட்டுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்