253
மைதான திறப்பு விழாவுடன் அஸ்பெக் அகடமி மற்றும் சிராஜ் பெட்மின்டன் கழகம் இணைந்து நடத்திய பெட்மின்டன் சுற்றுப்போட்டியில் அஸ்பெக் அகடமி அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
சிராஜியா அரபிக் கல்லூரி வளாகத்தில் அஸ்பெக் அகடமி பணிப்பானர் ஏ.எல்.எம். இர்பான் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இதில் சிராஜ் பந்து பெட்மின்டன் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டு துறை பணிப்பாளர் ரு. சிவராசா கலந்து கொண்டார். சிராஜ் அரபிக் கல்லூரியின் முதல்வர் யு. தாஹிர், கல்லூரியின் கல்விப் பிரிவு தலைவர் ஏ.எல். நைனா முஹமட் ஆகியோரும் பங்கேற்றனர்.