ண்டி கல்வி வலயத்தின் நவராத்திரி விழா வலயக் கல்வி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் டி.சி.ஐ.அந்திரகே தலைமையில் அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கண்டி அம்பிட்டிய ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பிரதான குரு சிவஸ்ரீ கனராஜ் தலைமையில் விசேட பூஜை நடைபெற்றதுடன், பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வு மற்றும் பரிசளிப்பு விழா ஆகியனவும் நடைபெற்றன.
இவ்விழாவில் கண்டி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எஸ்.ரமேஸ் பாபு, உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.எப்.அமீன், கோட்டக் கல்விப்
பணிப்பாளர் எஸ்.தமிழ்ச்செல்வன், பாடசாலை
அதிபர்கள், வலய கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவத்தகம தினகரன் நிருபர்
கண்டி கல்வி வலய நவராத்திரி விழா
242
previous post