Tuesday, October 8, 2024
Home » தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்

தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்

by mahesh
September 4, 2024 1:50 pm 0 comment

தேசிய மக்கள் சக்தி, தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி இடையில் கலந்துரையாடலொன்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர், கோப்பாய் தொகுதி அமைப்பாளர் தனீஸ், மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் சுரேன், யாழ் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் ரொரிங்டன், மகளிர் அமைப்பு செயற்பாட்டாளர்களான ஜான்சி மற்றும் அபி ஆகியோர் கலந்துகொண்டனர். வடபகுதியை மையமாகக் கொண்டு செயற்படும் தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் ஆனந்தராஜா, ஊடகப் பேச்சாளர் அருளானந்தம், பொருளாளர் வசந்தகுமார் மற்றும் தேசிய ஜனநாயக மக்கள் முன்ணியின் ஆலோசகர் கமலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஜனாதிபதித் தேர்தலலில் அநுரவுக்கு ஆதரவாக செயற்படுவது மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x