203
ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர் 180 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையிலே, இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோசமான வானிலை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக குறித்த மாணவர்கள் நேற்று முன்தினம் (02) அங்கு சிக்குண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.