Saturday, September 30, 2023
Home » மண் அகழ்வுக்கு எதிராக குச்சவெளியில் ஆர்ப்பாட்டம்

மண் அகழ்வுக்கு எதிராக குச்சவெளியில் ஆர்ப்பாட்டம்

by damith
September 18, 2023 11:18 am 0 comment

திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி – இக்பால் நகர் தொடக்கம் தென்னமரவாடி வரை கடற்கரை ஓரமாக மணல் அகழும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் அகழ்வினால் பாதிக்கப்படும் கிராமங்களில் வசிக்கும் மூவின மக்களும் இணைந்து நேற்று (17) குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மிட்வெஸ்ட் கெவி சான்ஸ் பிரைவேட் லிமிட்டட் (Midwest Heavy Sands pvt Ltd) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள குறித்த மணல் அகழ்வு அனுமதியை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த மணல் அகழ்வின் மூலம் இயற்கை வளம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

வழங்கிய அனுமதிக்கு முரணாக மணல் அகழப்படுவதால் கடற்கரையை அண்டி இருக்கின்ற கிராமங்கள் கடலுக்குள் உள்வாங்கப்படுகின்ற அபாயமும் நிலவுவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT