Wednesday, September 27, 2023
Home » மனித எச்சங்களை மறைக்க எடுக்கும் முயற்சியே விகாரைகள்

மனித எச்சங்களை மறைக்க எடுக்கும் முயற்சியே விகாரைகள்

செல்வம் அடைக்கலநாதன் MP குற்றச்சாட்டு

by gayan
September 16, 2023 7:24 am 0 comment

மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே பௌத்த விகாரைகளை அமைத்தும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்தியும் வருகின்றனரென்ற சந்தேகம் எழுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலிருந்து

மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று தென்னிலங்கை தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டுமெனவும், அவர் வலியுறுத்தியுள்ளார். மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் கிடப்பிலே உள்ளதெனவும் ஒவ்வொரு இடத்திலும் மனித எச்சங்களை கண்டுபிடித்து கிடப்பில் போடும் நிலையே இலங்கையில் காணப்படுவதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT