சனல் – 04 தொலைக்காட்சி தனது கருத்துக்களை திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாக சுவிட்சர்லாந்துக்கான முன்னாள் இலங்கை தூதுவர் சரத்கோன்கஹகே தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஆவணப்படம் தொடர்பில், தான் தெரிவித்த கருத்துக்களையே சனல் -04 திரிபுபடுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில், கடந்த வருடம் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை, இலங்கையின்
ஊடகவியாலாளரும் பிரிட்டிஸ் பிரஜையுமான பராஸ் சவுகெட்டாலி தன்னிடம் பேட்டி வழங்குமாறு கேட்டிருந்தார்.
பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் ஐ,டி,என், தொலைக்காட்சிக்கு பேட்டி வழங்குமாறு அவர் கோரியிருந்தார்.
எனினும், தான் வழங்கிய பேட்டியின் குரல் பதிவு முற்றிலும் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த தாக்குதல் முற்றுமுழுதாக ஐ,எஸ்,ஐ,எஸ், தீவிரவாதிகளின் நடவடிக்கையென்றே தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2005 மற்றும் 2010 காலத்தில் மஹிந்த ராஜபக்க்ஷ எப்படி தேர்தலில் வெற்றிபெற்றாரென அவர்கள் என்னை கேட்டனர். அவர் அந்த தருணத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தலைவராக காணப்பட்டாரென நான் தெரிவித்திருந்தேன்.
அவர்கள் இந்த இரண்டு பகுதிகளை மாத்திரம் பேட்டிக்கு பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் தூதுவர், இலங்கை ஊடகங்களின் கோப்பு படங்களிலிருந்து சில படங்களை சனல் 04 பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இங்கு வந்து அந்த படம் பிடிக்கவில்லை உள்ளுர் ஊடகமொன்றே அதனை வழங்கியதாகவும் சரத்கோன்கஹகே தெரிவித்துள்ளார்.
2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல்களை மையமாக கொண்டு இலங்கையின் அரசியல் நிலை குறித்து உரையாடும் விதத்தில் பிரிட்டனின் ஐ,டி,என், என்னை ஏமாற்றியுள்ளது. 2022,12, 22 ஆம் திகதி மாதிவெலயிலுள்ள எனது வீட்டில் வைத்து, நான் தெரிவித்த விடயங்கள் சனல் 4 இல் வெளியாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனை தளமாக கொண்ட ஐடிஎன் ஊடக நிறுவனமே அந்த பேட்டியை எடுத்துள்ளதாக நான் நினைத்தேன். சனல் 04 அதனை ஒளிப்பரப்பும் வரை அவர்கள்தான், அந்த பேட்டியை எடுத்துள்ளனர் என்பது எனக்கு தெரியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.