Friday, September 29, 2023
Home » மாவட்ட, பிரதேச அபிவிருத்தி குழுக்களுக்கு அறிவிக்க வேண்டும்
அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிடுகையில்

மாவட்ட, பிரதேச அபிவிருத்தி குழுக்களுக்கு அறிவிக்க வேண்டும்

by gayan
September 14, 2023 6:00 am 0 comment

அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலர் கடிதம்

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு கடிதம் மூலம், ஜனாதிபதியின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் அரை-அரச நிறுவனங்களால், மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை தயாரித்து, செயல்படுத்தும் போது அது குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக்

குழுக்களுக்கு அறிவிக்காமையினால் அரச அதிகாரிகளுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்கள் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகளை சமர்ப்பித்து வருகின்றனர். அரச அதிகாரிகள் , அரசியல் பிரதிநிதிகளுக்குமிடையில் தொடர்புகள் பேணப்படாமையால், பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இவ்விடைவௌிகள் பாரிய தடைகளை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பிலும் ஜனாதிபதியின் செயலாளர் கவனம் செலுத்தியுள்ளார்.இதனைக்கருத்திற்கொண்டே, ஜனாதிபதியின் செயலாளர் இந்த பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT