ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிப்பு

நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண் சரிவு அபாயம் காணப்படும் பட்சத்தில் அப்பகுதியிலிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும் அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.


Add new comment

Or log in with...