பாணந்துறையில் இளைஞர் வாளால் வெட்டப்பட்டு கொலை

நள்ளிரவில் நடு வீதியில் சம்பவம்

பாணந்துறை - வெகட பிரதேசத்தில் இளைஞனொருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள் ளார். இச்சம்பவம் புதன்கிழமை (31) இரவு இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுத் தாக்குதலுக்குள்ளான இவ்விளைஞன், பாணந்துறையிலுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக ஓடியுள்ளார்.

எனினும், இவ்விளைஞனைப் பின்தொடர்ந்த கொலையாளி,

அந்த இளைஞனை வாளால் வெட்டினார். இச்சம்பவம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

பாணந்துறை மோதரவில அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞனே இச்சம்பவத்தில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


Add new comment

Or log in with...