தேசிய மாற்றத்திற்கான கொள்கைத்திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட உரை நாளை

- இரவு 8.00 மணிக்கு ஒலி, ஒளிபரப்பு செய்யப்படும்

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 09 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார். 

அனைத்து பொதுமக்களையும் தெளிவுபடுத்துவதற்காக இந்த விசேட உரை  நாளை (01) இரவு 8.00 மணிக்கு நாட்டிலுள்ள அனைத்து தொலைக்காட்சி, வானொலி மற்றும் நவீன ஊடகங்களிலும்  ஒளி ஒலிபரப்பு செய்யப்பட இருக்கிறது.

இதன்மூலம், தேசிய மாற்றத்திற்கான   கொள்கைத்திட்டம் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவைப்பெற முடியும் என்பதுடன், எதிர்பார்க்கும் இலக்குகளை அடைவதற்கான செயல்பாட்டு முன்மொழிவுகளும் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட உள்ளன.


Add new comment

Or log in with...