அனைவரும் ஏகமனதாக என்னை தெரிவு செய்தால், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையை ஏற்கத் தயாரென, அந்தக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், தமிழரசுக் கட்சியின் தலைமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,
"நான் பதவிக்காக கட்சிக்குள் போகவில்லை. முரண்பாடு இல்லாத நிலை ஏற்பட்டு அனைவரும் ஏகமனதாக தெரிவு செய்யப்படுவார்களாக இருந்தால், போட்டியில்லாது அனைவரதும் ஒத்துழைப்போடும் இணக்கப்பாட்டோடும் தெரிவு செய்தால் அதை நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையிலுள்ளேன். ஒருமனதாக முரண்பாடு இல்லாமல் தெரிவு செய்யப்பட்டால், நான் அந்த கடமையை செய்யக்கூடிய ஆற்றல் பொறுப்பு எனக்குள்ளது. அதற்காக நான் யாரையும் குறை சொல்லியோ யாரையும் கழுத்தறுத்து பதவிக்கு வர விரும்பவில்லை. தலைமைக்கு தகுதியுடையவரென என்னை பலர் கேட்கின்றனர், கூறுகின்றனரென்பது உண்மையாக இருந்தாலும் கூட, எங்களுடைய கட்சி ஒற்றுமையாக போக வேண்டும். ஒருமனதாக போக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளது. அவ்வாறு இணக்கப்பாடு வந்தால், அதை நான் ஏற்றுக்கொள்வேன்" எனத் தெரிவித்தார்.
Add new comment