2022 O/L பரீட்சைகள் மே 15 இலிருந்து மே 29 இற்கு ஒத்திவைப்பு

- இரண்டு வாரங்களுக்கு பிற்போட முடிவு
- ஜூன் 08 வரை நடைபெறும்

எதிர்வரும் மே 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

அதற்கமைய, 2022 க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளை 2023 மே 29ஆம் திகதி முதல் ஜூன் 08ஆம் திகதி வரை நடாத்த திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் கடந்த ஜனவரி 23 ஆரம்பமாகி பெப்ரவரி 15ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் சுமார் இரண்டு மாதங்களாக தாமதமாகியுள்ளன.

இதனை அடிப்படையகாக் கொண்டே 2022 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் தொடர்பாடல் வசதிகள் ஊடாக பெறலாம் என அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

  • தொலைபேசி இலக்கங்கள்: 0112784208/ 0112784537/ 0112785922
  • தொலைநகல்: 0772784422
  • மின்னஞ்சல்: [email protected]

Add new comment

Or log in with...