Saturday, April 1, 2023 - 6:00am
தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
யாழ். துரையப்பா விளையாட்டரங்கின் அருகாமையிலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் ஆயர் ஜெபநேசன், யாழ். மாநகர முன்னாள் முதல்வர் இ. ஆனோல்ட், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
யாழ்.விசேட நிருபர்
Add new comment