இலங்கை அணிக்கு ICC யினால் அபராதம் விதிப்பு

இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அபராதம் விதித்துள்ளது

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மெதுவாக பந்துவீசியதால் ஐசிசி இந்த அபராதத்தை விதித்துள்ளது.

அதன்படி, இலங்கை அணிக்கு போட்டிக்கான பணத்தில் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான குற்றத்தை இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக ஏற்றுக்கொண்டுள்ளதால், இக்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தப்படாது எனவும் ICC தெரிவித்துள்ளது.

3 போட்டிகளைக் கொண்ட குறித்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்றையதினம் (28) இடம்பெறவிருந்த நிலையில், சீரற்ற வானிலை காரணமாக அது கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் முதல் போட்டியை வென்ற நியூஸிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...