இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
போட்டி இலங்கை நேரப்படி மு.ப. 6.30 மணிக்கு ஆரம்பமாக இருந்த நிலையில், ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட வானிலை எதிர்வுகூறலுக்கு அமைய, மழை காரணமாக போட்டி ஆரம்பிப்பது தாமதமானது.
இதனைத் தொடர்ந்து நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, எந்தவொரு பந்தும் வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தொடர் 1-0 என நியூசிலாந்து அணிக்கு சாதகமாக உள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெறும் இலங்கையின் வாய்ப்பு தொடர்ந்தும் நழுவியவாறு உள்ள நிலையில், இத்தொடரை சமன் செய்வதற்கான முயற்சியையே தற்போது இலங்கை அணி மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இத்தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி வெள்ளிக்கிழமை (31) ஹமில்டனில் இடம்பெறவுள்ளது.
Add new comment