தாயின் கருவிலுள்ள குழந்தைக்கு வெற்றிகரமான இதய சத்திரசிகிச்சை!

இந்திய மருத்துவநிபுணர்கள் நிகழ்த்திய சாதனை!

இந்தியத் தலைநகர் டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 28 வயதான கர்ப்பிணிப்பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே மூன்று முறை கரு கலைந்திருந்தது. 4ஆவது முறையாக கர்ப்பம் அடைந்த அப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இது பற்றி பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்பெற்றோர் இந்தக் குழந்தையை பெற்றெடுக்க விரும்பினர். இதையடுத்து கருவிலேயே குழந்தைக்கு இதய சிகிச்சை அளிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ​ெடாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

மிகவும் சவாலான இந்த சத்திரசிகிச்சையை மகப்பேறு மருத்துவத்துறையுடன் இணைந்து இதயவியல் மற்றும் இதய மயக்க மருந்துத்துறை ​ெடாக்டர்கள் குழுவினர் செய்தனர். அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதலின் கீழ் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாயின் அடி வயிற்றில் துளையிட்டு மெல்லிய குழாய் செலுத்தப்பட்டது. அது கருவில் உள்ள குழந்தையின் இதயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதிலிருந்து சிறிய பலூன் வடிகுழாயை பயன்படுத்தி, திராட்சை அளவு கொண்ட இதயத்தில் இருந்து அடைப்பு வெற்றிகரமாக நீக்கப்பட்டது. இந்த சிகிச்சையை 90 நிமிடங்களில் செய்து முடித்தனர்.

சத்திர சிகிச்சைக்குப் பிறகு தாயும், குழந்தையும் நன்றாக உள்ளதாக ​ெடாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக சத்திர சிகிச்சை செய்த மூத்த ​ெடாக்டர் ஒருவர் கூறும்போது, "தாயின் அடிவயிற்றின் வழியாக கருவில் உள்ள குழந்தையின் இதயத்தில் ஒரு ஊசியை செலுத்தி அடைப்பை சரி செய்தோம். குழந்தையின் இதயம் நன்றாக வளரும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் குழந்தை பிறக்கும் போது இதயநோய் தீவிரம் குறைவாக இருக்கும். இதுபோன்ற ஒரு செயல்முறை மிகவும் சவாலானது. ஏனென்றால் அது கருவின் உயிருக்குக் கூட ஆபத்தாகலாம். இந்தச் சிகிச்சை மிக விரைவாக செய்யப்பட வேண்டும். ஏனென்றால் இதயத்தின் பெரிய அறையை துளைக்க வேண்டி இருந்தது. ஏதாவது தவறு நடந்தால் குழந்தைக்கு ஆபத்தாக முடியும். இந்த சிகிச்சையை நாங்கள் விரைவாக செய்து முடித்தோம்" என்றார்.


Add new comment

Or log in with...