பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேஸ்லைன் வீதி, ஹல்கஹகும்புர பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்ய முற்பட்டபோது ஆயுதம் தவறுதலாக செயற்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாரால் 2 இராணுவ உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்திருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்தில் நபர் ஒருவரை கைது செய்ய சிவில் உடையில் சென்ற இராணுவ படைவீரர்கள் இருவர் குறித்த நபரை கைது செய்யச் சென்ற வேளையில் அதில் ஒருவர், தனது காற்சட்டையிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்வது, அங்குள்ள CCTV கெமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Add new comment