இன்று (13) இரவு 8.00 மணி முதல் 10 மணித்தியாலங்களுக்கு ஒரு சில இடங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அவசர திருத்தப் பணிகள் காரணமாக குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, சபை குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, இரத்தோட்டை, கைகாவல, வேரகம ஆகிய பிரதேசங்களில் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை (14) முற்பகல் 6.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, 1939 எனும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையை தொடர்பு கொள்ளுமாறு சபை கேட்டுக்கொண்டுள்ளது.
Add new comment