திடீர் மின்சாரத் தடை; இருளில் மூழ்கியது வைத்தியசாலை

மொபைல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை

கொழும்பு - ராகம போதனா வைத்தியசாலையில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, கையடக்க தொலைபேசி வெளிச்சத்தில் வைத்தியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தனர். ராகம போதனா வைத்தியசாலையின் மின் பிறப்பாக்கிகளில்  ஏற்பட்ட கோளாறினால், நேற்று முன்தினம் 9.30 மணியளவில் இவ்வைத்தியசாலையில் மின்தடை ஏற்பட்டது.

இதன் காரணமாக நோயாளிகள் உட்பட ஒட்டுமொத்த ஊழியர்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். எனினும் உடனடியாக நோயாளிகளை பரிசோதிக்கும்பொருட்டு கையடக்கத் தொலைபேசி ஒளியைக் கொண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...