- நாளை முதல் மீண்டும் 2 மணித். 20 நிமிட மின் வெட்டு
புது வருட தினமான இன்றையதினம் (01) மின் வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பண்டிகைக் காலம் கருதி டிசம்பர் 24ஆம் திகதி சனிக்கிழமை, கிறிஸ்மஸ் தினமான ஞாயிற்றுக்கிழமை (25) மற்றும் கடந்த (26) திங்கட்கிழமை மற்றும் கடந்த வருடத்தின் இறுதி நாளான நேற்று (31) சனிக்கிழமை ஆகிய தினங்களிலும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாளை, ஜனவரி 02ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் இரு கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின் வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளை திங்கட்கிழமை (02) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,
ஜனவரி 02: 2 கட்டங்களில் 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள்
ABCDEFGHIJKL | PQRSTUVW :
- பி.ப. 3.00 - பி.ப. 6.00 இடையில் 1 மணித்தியாலம்
- பி.ப. 6.00 - பி.ப. 10.00 இடையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்
மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
<<மின்வெட்டு அட்டவணை ஜனவரி 02.pdf>>
<<பிரதேசங்கள்-A-Z.pdf>> பிரதேச ரீதியான மின்வெட்டு அட்டவணை விரைவில் இணைக்கப்படும்)
Add new comment