தீர்வு இன்றேல் மல்வத்த பிளாண்டேசனுக்கு உட்பட்ட அனைத்து தோட்டங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கை!

- அரைச் சம்பளம்; தொழிலாளர்களை முறையாக நடத்தவில்லை

வெலிமடை டவுன்சைட் தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு அரை சம்பளம் வழங்கல், தொழிலாளர்களை முறையாக நடத்தாமை உள்ளிட்ட விடயங்களுக்கு தோட்ட நிர்வாகம் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் (12) தீர்வு வழங்காவிடின், போராட்டம்  முன்னெடுக்கப்படும் என  இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தோட்ட நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த தோட்டத்திற்கு எதிர்வரும் திங்கட்கிழமை நேரடியாக விஜயம் மேற்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுவுள்ளதாக, இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தோட்ட நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாவிடின் மல்வத்த பிளான்டேஸனுக்கு சொந்தமான அனைத்து தோட்டங்களிலும் பணி புரியும் தொழிலாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Add new comment

Or log in with...