புதையல்; தொல்பொருள் உத்தியோகத்தர் உள்ளிட்ட 6 பேர் கைது

திருகோணமலை, அபயபுர  பகுதியில்  புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பிராந்திய குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அபயபுர- லெனின் மாவத்தையில்  நேற்று (03) வீடொன்றில் புதையல் தோண்டி கொண்டிருந்த போது வீட்டு உரிமையாளர் உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கந்தளாய், காலி, நீர்கொழும்பு, அம்பாறை, தீகவாபி பகுதிகளைச் சேர்ந்த 22, 24, 28, 35 வயதுகளை உடையவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்து சந்தேக நபர்கள் ஆறு பேரையும் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...