முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சிகிச்சைக்காக ஐடிஎச் வைத்தியசாலைக்கு வந்ததாகவும், அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அவருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கையின் 6ஆவது நிறைவேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் குணமடையும் வரை, பொதுக் கூட்டங்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளதாகவும் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
Add new comment