பிரியமாலிக்கு ரூ. 80 இலட்சம் வழங்கினாரா அஸாத் சாலி?

வாக்கு மூலம் வழங்க நேற்று CID க்கு சென்றார்

கோடிக்கணக்கான நிதியை மோசடி செய்துள்ளாரென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பாக மேற்கொள்ளப்படும். விசாரணைகளின்படி வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி நேற்று குற்றத்தடுப்பு விசாரணை

திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரிடமிருந்து வாக்குமூலமும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. காணியொன்றை விற்று பெற்றுக் கொண்ட 80 இலட்சம் ரூபா பணத்தை அசாத் சாலி சந்தேக நபரான பெண்ணிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜானகி சிறிவர்த்தன என்ற பெயருடைய பெண் மூலம் அந்தப் பணம் சந்தேக நபரான பெண்ணுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோடிக்கணக்கான நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளாரென்ற சந்தேகத்தின் பேரில் திலினி பிரியமாலி குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தினால் கடந்த ஐந்தாம் திகதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக தற்போது 11 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

லோரன்ஸ் செல்வநாயகம்


There is 1 Comment

முஸ்லிம் குரல் இந்த முஸ்லீம் அரசியல்வாதிகளின் பாசாங்குத்தனம் மற்றும் ஊழல் பற்றி எழுதிய போது, வாசகர்கள் சிலர் முஸ்லிம் குரலில் தவறு கண்டனர். சமூக ஊடக வலைத்தளங்கள் கூட விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட கருத்துகளை வெளியிட மறுத்துவிட்டன. இன்று முஸ்லிம் குரல் மகிழ்ச்சியில் உள்ளது - அல்ஹம்துலில்லாஹ்". நாம் அம்பலப்படுத்தியது அல்லது கூறியது சரி என்று நிரூபணமாகிறது. இந்த நயவஞ்சகர்கள் அரசியல் செய்யவோ அல்லது முஸ்லிம் சமூக விவகாரங்களில் ஈடுபடவோ முஸ்லிம்களால் தடை செய்யப்பட வேண்டும், இன்ஷா அல்லாஹ். யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்கள், தேசிய தொலைக்காட்சி சேனல்கள் உள்ளிட்ட சேனல்கள் இந்த ஊழல்களில் உள்ள அனைத்து முஸ்லிம் தொடர்புகளையும் அம்பலப்படுத்துகின்றன.இஸ்லாமிய சமூகத்திற்கு என்ன அவமானம்?அரசும் அதிகாரிகளும் இந்த நபர்களின் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து சமுர்த்தி திட்டத்தின் கீழ் அல்லது ஏழை மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், இன்ஷா அல்லாஹ். Noor Nizam - Convener "The Muslim Voice".

Add new comment

Or log in with...