கொன்சியூலர் விவகாரப் பிரிவின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு செயன்முறை மீண்டும் ஆரம்பம்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை பிராந்திய அலுவலகங்களில் ஏற்பட்ட சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்புப் பிரிவின் கணனி கட்டமைப்பிலான செயலிழப்புக் கோளாறுகள் சீரமைக்கப்பட்டு, குறித்த சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு சேவைகள் 2022 செப்டம்பர் 20 நாளை (20) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது என்பதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.

இது தடுப்பில் அமைச்சியை விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளது.

அதேபோன்று, கொன்சியூலர் விவகாரப் பிரிவின் ஏனைய அனைத்து சேவைகளும் தொடர்ந்தும் இடம்பெறுமென, அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வருகை தரும் சேவை நாடுநர்கள் மேலதிக விவரங்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிந்து கொள்ள முடியும்:

கொன்சியூலர் விவகாரப் பிரிவு, கொழும்பு 1 - 0112338812 / 0112338843
பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் - 0212215970
பிராந்திய அலுவலகம், திருகோணமலை - 0262223182
பிராந்திய அலுவலகம், கண்டி - 0812384410
பிராந்திய அலுவலகம், குருணாகல் - 0372225941
பிராந்திய அலுவலகம், மாத்தறை - 0412226697


Add new comment

Or log in with...