திருகோணமலையைச் சேர்ந்த நால்வர் படகு மூலம் இந்தியா சென்றடைவு

- இதுவரை 133 இலங்கையர் இந்தியா சென்றடைவு

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் படகு மூலம்  இன்று(13) சனிக்கிழமை அதிகாலை தமிழகம் இராமேஸ்வரம் பகுதியை சென்றடைந்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த 2 பெண்களும் 2 ஆண்களுமாக தமிழகத்தை சென்றடைந்தவர்களிடம் இந்திய கரையோர பாதுகாப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்தியாவின் தமிழகத்திற்கு அகதிகளாக நுழைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.

யாழ். விசேட நிருபர்


Add new comment

Or log in with...