Wednesday, August 10, 2022 - 6:44pm
- தஞ்சம் கோரவில்லை; 90 நாட்கள் தங்க அனுமதி
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்து வர கோரிக்கை விடுத்துள்ளதாக, தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் அவருக்கு இல்லை எனவும், இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருப்பதால் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்க அனுமதிப்பதில் பிரச்சினை இல்லையெனவும், தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
றிஸ்வான் சேகு முகைதீன்
Add new comment