காலி முகத்திடல் கடற்கரையில் கரையொதுங்கிய மற்றுமொரு சடலம்

- மோட்டார் சைக்கிள் துப்பாக்கிச் சூடுகளில் மே 30 முதல் இதுவரை 17 பேர் பலி

காலி முகத்திடல் கடற்கரையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (01) அதிகாலை வேளையில் மீட்கப்பட்டுள்ள குறித்த சடலம், இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலத்தை மீட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை (29) காலி முகத்திடல் கடற்கரையில், கொட்டாவையைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரின சடலமும் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த மே 30ஆம் திகதி முதல் இதுவரை மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட சம்பவங்களில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்கத்கது.


Add new comment

Or log in with...