எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தவர் வாகனத்தில் மரணம்

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

பொரளை டிக்கல் (Tickle) வீதியில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த 60 வயதான நபர் ஒருவர் காரினுள்ளேயே இவ்வாறு மரணித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில், நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை அடுத்து, எரிபொருள் வரிசையில் இதுவரை 10 இற்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...