மின்சாரம், எரிபொருள், வைத்தியசேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

- ஜனாதிபதியினால் மீண்டும் அதி விசேட வர்த்தமானி

மின்சார விநியோகம், எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்ட  அதனுடன் தொடர்புடைய சேவைகள், அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றையதினத்தை (20) குறிப்பிட்டு குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய,
1. மின்சாரம் வழங்கல்  தொடர்பிலான சகல சேவைகள்
2. பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருட்கள் வழங்கல் அல்லது விநியோகம்
3. வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, உபசரிப்பு பாதுகாப்பு, போசாக்கூட்டல், சிகிச்சை அளித்தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்த வகையிலான சகல சேவைகள், வேலைகள், அல்லது தொழில் பங்களிப்பு.

ஆகியன அத்தியாவசிய சேவைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

PDF File: 

Add new comment

Or log in with...