நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் கட்சியிலிருந்து நீக்கம்

நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 15ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஒழுக்காற்று  நடவடிக்கை குழு கூட்டத்தில் வேலு யோகராஜா மீதான அரச காணி மோசடி தொடர்பான குற்றம் தொடர்பான விசாரணை செய்யப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் ஆராயப்பட்டு, உண்மைத்தன்மையின் அடிப்படையில் நிர்வாக சபையினால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...