Saturday, June 18, 2022 - 1:40pm
பேராதனை பல்கலைக்கழகத்தை இன்று முதல் தற்காலிக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக இவ்வாறு பல்கலைக்கழகத்தை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் எம்.டி. லமாவன்ச தெரிவித்தார்.
அதற்கமைய, பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை இணைய வழி மூலம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த வகையில் தற்போது பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் உள்ள மாணவர்களை தங்களது இருப்பிடங்களுக்கு செல்லுமாறு அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment