பஸ்களில் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் முறையிடவும்

1955 க்கு அழைத்து முறையிட அறிவிப்பு

நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணத்தைவிட அதிகளவில் கட்டணத்தை வசூலிக்கும் பஸ் நடத்துநர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டோ தெரிவித்துள்ளார். முறையற்ற வித்தில் பஸ் கட்டணம் அறவிடப்படுமானால் உடனடியாக 1955 என்ற

எண்ணுக்கு அழைக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டண திருத்தத்திற்கு பின்னர் அதிக கட்டணம் வசூலிப்படுவதாக பல புகார்கள் வந்துள்ளதாகவும், தொலைபேசியில் வரும் புகார்களுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார். பஸ் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக நாடு முழுலதும் நடமாடும் பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...