- 6 நாட்களில் எரிபொருள் உற்பத்தி
- நாட்டில் கையிருப்பில் உள்ள எரிபொட்களின் அளவுகள் வெளியீடு
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகள் இன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, மின்சக்தி , வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று கச்சா எண்ணெய் இறக்கப்படுவதை தொடர்ந்து, மார்ச் 20ஆம் திகதிக்கு பின்னர் முதல் முறையாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் கணக்கில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Sapugaskanda Refinery will commence operations for first time since March 20th with a Crude Oil cargo unloading tomo. The refinery will start producing Fuel Oil in 6 days. Stocks on 26 May -
Diesel 23022 MT, Sup Diesel 2588 MT, 92 Pet 39968 MT, 95 Pet 7112 MT and JETA1 3578 MT— Kanchana Wijesekera (@kanchana_wij) May 26, 2022
அதற்கமைய, சுத்திகரிப்பு நிலையம் 6 நாட்களில் எரிபொருட்களை உற்பத்தி செய்ய ஆரம்பிக்குமென, அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெற்றோல் ஏற்றிய கப்பலில் இருந்து தற்போது பெற்றோல் இறக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று (27) மு.ப. 8.30 மணியளவில் CEYPETCO விடம் கையிருப்பில் உள்ள எரிபொருட்களின் அளவுகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
Fuel Stock Update
Stock Details as at 2022/05/27 08:30 hrs
For All CPSTL/CPC Plants
Diesel - 20,598
Sup. Diesel - 1,778
92 Pet - 42,750
95 Pet - 6,579
JET A1 - 3,104
Note - All figures in MT, Petrol vessel still been unloaded
CPSTL SAP ERP System— Kanchana Wijesekera (@kanchana_wij) May 27, 2022
இன்றையதினம் எரிபொருள் கையிருப்பு (மெ.தொன்)
- டீசல் - 20,598
- சுப்பர் டீசல் - 1,778
- பெற்றோல் 92 - 42,750
- பெற்றோல் 95 - 6,579
- JET A1 - 3,104
நேற்றையதினம் (26) எரிபொருள் கையிருப்பு (மெ.தொன்)
- டீசல் - 23,022
- சுப்பர் டீசல் - 2,588
- பெற்றோல் 92 - 39,968
- பெற்றோல் 95 - 7,112
- JET A1 - 3,578
Add new comment