பைடனின் ஆசிய பயணம் ஆரம்பம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று தென் கொரியாவுக்கு பயணமானார். தொடர்ந்து அவர் இன்று ஜப்பானுக்குப் பயணிக்கவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் பைடன் ஆசியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ஆசியாவில் அமெரிக்காவின் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்த அவர் முனைகிறார். 

அத்துடன் சுதந்திரமான, தடையற்ற இந்தோ–பசிபிக் வட்டாரத்தை உறுதிசெய்யும் பைடன் நிர்வாகத்தின் நோக்கத்தையும் அவர் முன்வைப்பார்.  

அவரது வருகையின்போது வட கொரியா அணுவாயுதச் சோதனையை நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. 

எந்த நேரத்திலும் அணுவாயுதச் சோதனையை நடத்த வட கொரியா தயாராய் இருப்பதாகத் தென் கொரிய உளவுத் துறை எச்சரித்துள்ளது. 

அணுவாயுத நாடான வட கொரியா, வட்டாரத்தின் பாதுகாப்புக்கு விடுக்கும் மிரட்டல் குறித்தும் பைடனின் வருகையின்போது பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட கொரியா ஏற்கனவே இந்த ஆண்டில் சாதனை எண்ணிக்கையாக 16 ஏவுகணைச் சோதனைகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...