Tuesday, May 17, 2022 - 6:08pm
நேட்டோ அமைப்பின் அங்கத்துவத்திற்கு விண்ணப்பிப்பதாக சுவீடன் மற்றும் பின்லாந்து உறுதி செய்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்திருக்கும் நிலையிலேயே இந்த வரலாற்று நகர்வு இடம்பெற்றுள்ளது.
இந்த மேற்கத்திய பாதுகாப்பு கூட்டமைப்பில் இணைவதற்கு ஆதரவாக தமது நாடு விண்ணப்பிக்கும் என்று சுவீடனின் சமூக ஜனநாயக அரசு கூறியுள்ளது. இந்த கூட்டமைப்பில் இணையவிருப்பதாக பின்லாந்து உத்தியோகபூர்வமாக அறிவித்த நிலையிலேயே சுவீடனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேட்டோவை பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கும் ரஷ்யா, இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Add new comment