மின்வெட்டு: ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டால்: 3 மணித்தியாலங்கள் 20 நிமிடம்; தளர்த்தப்பட்டால் : 5 மணி நேரம்

நாளைய தினம் (12) பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு மாற்றமில்லாமல் தொடரும் எனவும், ஊரடங்கு தளர்த்தப்பட்டால் எரிபொருள் மின்வெட்டு நேரம் 5 மணிநேரமாக அதிகரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

போதிய எரிபொருள் இன்மை மற்றும் அதிக மின்சார கேள்வி காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அதற்கமைய, நாளை (12) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | MNO | XYZ | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,

மே 12 : இரு கட்டங்களில் 5 மணித்தியாலங்கள்:

ABCDEFGHIJKL | PQRSTUVW :
 - மு.ப. 8.00 - பி.ப. 6.00 வரை 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்
 - பி.ப. 6.00 - இரவு 9.20 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்

MNO | XYZ  :
 - மு.ப. 5.00 - மு.ப. 8.00 வரை 3 மணித்தியாலங்கள்

CC :
 - மு.ப. 6.00 - மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

(மின்வெட்டு பிரதேச பட்டியல் விரைவில் இணைக்கப்படும்)

PDF File: 

Add new comment

Or log in with...