அனைத்து மக்களையும் அமைதி பேணுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

சம்பந்தப்பட்டோர் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை

வன்முறைகளை கட்சி பேதமின்றி வன்மையாக கண்டிப்பதாகவும் வன்முறைகள் தற்போதைய நெருக்கடிக்கு வன்முறை தீர்வாகாது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

வன்முறைகளை கைவிட்டு அமைதியாக செயற்படுமாறு சகல மக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள அவர், இந்த நெருக்கடிக்கு தீர்வு காண மக்கள் ஒன்றிணைந்து செயற்படுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏற்பட்ட வன்முறைகள் சொத்து சேதங்கள் தொடர்பிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமருக்கு ஆதரவாக அலரி மாளிகையில் திரண்ட சிலர் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வோரை தாக்கி அவர்களின் கூடாரங்களையும் பொருட்களையும் சேதமாக்கினர். இதனை தொடர்ந்து மோதல்கள் சொத்து சேதங்கள் ஏற்பட்டன. அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள்


Add new comment

Or log in with...