நாட்டை விட்டு நான் ஒருபோதும் ஓடமாட்டேன்

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் கப்ரால்

நான் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன். அனைத்து குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்வேன் என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். கப்ரால் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என வதந்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஏனைய ஆளுநர்களை போல நான் நாட்டை விட்டு ஓடமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நாட்டை சேர்ந்தவர்களிற்கு தெரிந்தது போல நான் தீங்கிழைக்கும் வெறுக்கத்தக்க குற்றச்சாட்டுகளை அமைதியாகவே எதிர்கொண்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...