பொதுமக்களின் உதவியையும் நாடுகிறது
மிரிஹான பகுதியில் அண்மையில் இடம்பெற்ற குழப்பகரமான சம்பவங்களின் போது பஸ்ஸுக்கு தீ வைத்த சந்தேக நபரை கைதுசெய்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை கோருவதாக குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில் அதுதொடர்பில் தகவலறிந்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு அந்தத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேவேளை, மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நேற்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். சந்தேகநபர்கள் 31பேர் நேற்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment